
வட்டக்கொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளர் பேலியாகொடை மீன் சந்தையுடன் தொடர்புப்பட்டரெனவும் குறித்த தொற்றாளியை பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 27/10/2020 செவ்வாய்க்கிழமை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு 28/10/2020 பீ.சீ.ஆர் முடிவில் குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொட்டக்கலை -தலவாக்கலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் குறிப்பிட்டார்.
மேலும் யொக்ஸ்போர்ட் தோட்டம் முழுமையாக தொற்றுநீக்கிகளை தெளிப்பதற்கும் தொற்றாளியை கந்தக்காடுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். மேலும் வட்டக்கொடை நகரத்தை தற்காலிகமாக மூடுவதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நீலமேகம் பிரசாந்த்
1,374 total views, 2 views today