தலவாக்கலை த.ம.வித்தியாலய மண்டபத்தில் இரத்ததான நிகழ்வில் அதிகமானவர்கள் பங்கேற்பு!!

0
111

இரத்ததான முகாமில் அதிகமானவர்கள் பங்கேற்பு தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று 25 ஆம் திகதி இடம் பெற்ற இரத்ததான நிகழ்வில் அதிகமானவர்கள் பங்குகொண்டனர்.

குறிப்பாக மலையக பிரதேசத்தில் திடிர் விபத்துக்கள் ஆபத்துக்கள் மற்றும் நோய்கள் ஏற்படும்பொழுது
குறித்த நோயாளர்களை காப்பாற்றுவதற்காக குருதி பற்றாக்குறை ஏற்படும் பொழுது குறித்த
நோயாளர்களை காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதே வேளை குறித்த நோயாளர்களின் உறவினர்கள் குருதி வழங்கும் நபர்களை தேடி அலைவதோடு அதிகமான பணமும் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

0F7A5300 20180125_105605

இம்மக்களுக்கு உதவும் பொருட்டு நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் அதிகமானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் இரத்ததானம் செய்தவர்குளுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வை டீ பீல்ட் நிறுவனம் மற்றும் எழு தோழா இளைஞர் ஒன்றியம் ஏற்பாடுகளை செய்திருந்தமை
குறிப்பிடதக்கது.

 

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here