மாகாண சபை உறுப்பினர் ஏ.கணேஷமூர்த்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது!!

0
104

ஊவா மாகாண சபை வளாகத்தில் வைத்து நேற்று, ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.கணேஷமூர்த்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை பாதுகாப்புடன் பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் அவர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஏ. கணேஷமூர்த்தி தொடர்ந்தும் பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஊவா மாகாண சபை வளாகத்தில் நேற்று இடம்பெற்ற முறுகலின் போது மாகாண சபை உறுப்பினர்களான ஏ.கணேஷமூர்த்தி மற்றும் உபாலி சேனாரத்ன உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here