நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகரத்திற்கு சென்ற தனியார் பேருந்து விபத்து!!

0
115

நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகரத்திற்கு சென்ற தனியார் பேருந்து விபத்து

சிறிய குழந்தை உட்பட 05பேர் காயம்.

நுவரெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகரத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சிறிய குழந்தை உட்பட 05பேர் காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 01.02.2018.வியாழக்கிழமை காலை 07.40மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

02 03 05 01

குறித்த தனியார் பேருந்து நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகர்புறத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து அதிக வேகத்தின் காரணமாக நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் டொப்பாஸ்ட் பகுதியில் மண்மேடு பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியதாக நுவரெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தின் காரணமாக தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யபட்டுள்ளதோடு பேருந்தின் சாரதி இன்றைய தினம் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த படஉள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-டி. சந்தரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here