பிரதியமைச்சர் பாலித மற்றும் அவரது மகன் வைத்தியசாலையில் அனுமதி!!

0
93

ஐந்து நாட்களாக புளத்சிங்கள நகரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் அவரது மகனும் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த தனது மகனை பார்க்க சென்றிருந்த நிலையில், அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரதியமைச்சர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டதால் அவரது மகனுக்கு நோய் நிலை ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here