சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை நீக்கப்படும்!

0
109

பேஸ்புக் உள்ளிட் சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை(16) காலை நீக்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர், ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டடிருந் குழப்பநிலையின்போது, பேஸ்புக்கில் வெறுக்கதக்க, வன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் பதிவேற்றப்பட்டிருக்கும் நிலையில், அதனை அகற்றுவதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு ஒன்று நாளைமறுதினம் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here