மஸ்கெலியா மோதல் சம்பவம்; 38 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை !

0
108

38 பேருக்கும் அட்டன் நீதிமன்றினால் அழைப்பானை மஸ்கெலியா பிரதேச்சபையின் தவிசாளரை நியமிக்கும் நோக்கில் மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட பதற்றநிலை மற்றும் கல்வீச்சி தாக்குதல் தொடர்பான சம்பவம் குறித்து 38பேருக்கு அட்டன் நீதிமன்றில் பீ.அறிக்கை சமர்பிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸ் வட்டாரத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேலை இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் 19பேருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் 19பேருக்கும் மொத்தம் 38பேருக்கும் 25.04.2018.புதன் கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றினால் அழைப்பானை பிறப்பிக்கபட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி புதன் கிழமை மஸ்கெலியா பிரதேசசபைக்கான தவிசாளரை தெரிவு செய்யும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியினை சார்ந்த ரஞ்சனி என்ற உறுப்பினர் வாக்களிப்புக்கு கலந்து கொள்ளாமை தொடர்பில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் கல் வீச்சி சம்பவம் தொடர்பிலும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையுரு விலைவித்தமை தொடர்பிலும் இந்த பீ.அறிக்கை அட்டன் நீதிமன்றில் சமர்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Maskeliya-Pradeshiya-Sabha-5 Maskeliya-Pradeshiya-Sabha-15-696x392 Maskeliya-Pradeshiya-Sabha-12

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் கண்கானிப்பில் ஈடுபட்ட இரகசிய பொலிஸாரினால் இந்த 38பேரும் இனங்காணபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸாரால் தெழிவுபடுத்தபட்டமைக்கு அமைய  பீ.அறிக்கை சமர்பிக்கபட்டமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here