பாடசாலை மாணவியை அறை ஒன்றிற்கு அழைத்து செல்லபட்ட சம்பவம்- சந்தேக நபர் எதிர் வரும் 24ம் திகதிவரை விளக்கமறியல்!!

0
105

பாடசாலை மாணவியை அறை ஒன்றிற்கு அழைத்து செல்லபட்டதாக கூறப்படும் சந்தேக நபர் எதிர் வரும் 24ம் திகதிவரை விளக்கமறியல்பொகவந்தலாவ ஹோலிரோஸசரி தமிழ் மாகா வித்தியாளயத்தில் தரம் 08ல் கல்வி பயிலும் 13வயது மாணவியை பாடசாலையில் வைத்து அறை ஒன்றுக்குல் அழைத்து சென்ற குற்றசாட்றில் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்ட சந்தேகநபர் எதிர் வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

18.04.2018. புதன் கிழமை குறித்த சந்தேக நபரை அட்டன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ ஹோலிரோஸரி தழிம் மாகா வித்தியாளயத்தில் மேலதிக வகுப்புகளுக்காக 17.04.2018. செவ்வாய் கிழமை காலை தரம் 08யை சேர்ந்த மாணவர்களால் பாடசாலைக்கு அழைக்கபட்டிருந்த வேலை சிறிது நேரம் கழிந்த பின் குறித்த வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் இல்லையென பாடசாலையின் அதிபரினால் அறிவுருத்தல் வழங்கபட்டமையை அடுத்து குறித்த மாணவி வீட்டுக்கு சென்ற வேலையில் பாடசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கின்ற கட்டிடம் ஒன்றில் மேசன் தொழில் புரிகின்ற 34வயது நபர் குறித்த சிறுமிக்கு உணவு தருவதாக கூறி அறை ஒன்றுக்குல் அழைத்து சென்றதை கண்ட மாணவர்கள் கூச்சலிட்டதை அடுத்து பொதுமக்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here