நுவரெலியா பிரதேசத்தில் கல்வி விழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றச்சாற்று!!

0
156

நுவரெலியா பிரதேசத்தில் கல்வி விழ்ச்சியடைந்துள்ளது.நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றச்சாற்று

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேசத்தில் உள்ள ஜந்து கல்வி வலயங்களிலுமே கல்வி வளர்ச்சி விழ்ச்சியடைந்து கானபடுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் குற்றம் சுடத்தியுள்ளார் .14.05.2018.திங்கள் கிழமை நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றபோதே இதனை தெரிவித்தார்

இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க கல்வி அமைச்சர் உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர் ,பி.சக்திவேல்,பியசிறீ,எஸ்.பி.ரத்நாயக்க, நுவரெலியா மாநகரசபை முதல்வர் சந்ரலால் கருனாதிலக்க, நுவரெலியா பிரதேசசபை தலைவர், கொட்டகலை பிரதேசசபை தலைவர் , அக்கரபத்தனை பிரதேசசபையின் தலைவர் மற்றும் பலரும் கலந்து கொண்டணர்.

இதேவேலை இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் முன்வைத்த குற்றச்சாற்றினை நுவரெலியா வலயகல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.மோகன்ராஜ் இதற்கு மறுப்பு தெரிவித்தார்

இந்த அவிருத்தி குழு கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன், ஹோலிப்பன்ட் பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஓதுக்கபட்டுள்ளது எங்களுக்கு முடியும் ஆரம்ப்பிரிவு பாடசாலையை மாத்திரம் உறுவாக்க அப்படி அந்த பாடசாலைக்கு மேலதிக வகுப்புக்கல் மேற்கொள்ளவெண்டுமனால் மாணவர்களின் தொகை அதிகரிக்கபட வேண்டும் மாணவர்கள் அதிகமாக இல்லாவிட்டால் அங்கு மேலதி ஆசிரயர்கள் வழங்கமுடியாது. குறித்த பாடசாலைக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வலயகல்லி பணிப்பாளர் கான்பித்தால் அதைபற்றி எம்மால் யோசனை ஒன்று முன்வைக்கமுடியும் .

IMG-20180514-WA0006-1

இலங்கையில் கல்வி துறையில் எடுத்து கொண்டுடால் இலங்கையில் காணபடுகின்ற 98கல்வி வலயங்களில் நுவரெலியா கல்விவலயம் 74வது இடத்தை பிடித்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதேவேலை தோட்டபுறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் மாலை வேலைகளில் மதுபாணம் அருந்துவதாக்குற்றச்சாற்று எழுந்துள்ளது இதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ளுமாறு பிரதேச பொலிஸாருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் அறிவுருத்தல் வழங்கபட்டமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ், டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here