சட்டவிரோத ஒரு தொகை சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!!

0
98

அட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் சட்டவிரோத 1220 சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் 19.05.2018. சனிகிழமை இரவு குறித்த சந்தேக நபர் அட்டன் நகரில் வைத்து குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கைது செய்யபட்டதாக அட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபரிடம் இருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகளும் மீட்கபட்டதாக குற்றதடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

DSC02208 DSC02215

கைது செய்ய்பட்ட சந்தேக நபர் 20.05.2018.ஞாயிற்றுகிழமை அட்டன் நீதாவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் குற்றதுடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதிஸ் , மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here