நாட்டில் நிலுவும் சீரற்ற காலநிலையால் மஸ்கெலியா சாமிமலை தோட்டபகுதியில் 10 குடும்பங்களை சேர்ந்த 60பேர் பாதிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்று பெறுகெடுத்ததன் காரணமாக 10குடியிருப்புக்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
பாதிக்கபட்ட 10 குடும்பங்களும் மஸ்கெலியா சாமிமலை தமிழ் வித்தியாளயத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ.சதீஸ்)