தங்கக்கலையின் எடிசனின் மின்சாரம் இல்லாத மின்குமிழ்- நுவரெலியாவில் மாணவன் சாதனை!!

0
178

நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள தங்கக்கலை த.ம.வி மாணவன் சந்திரமோகன் திவாகர் கழிவுப்பொருட்களை பயன் படுத்தி மின்கலத்தின் உதவியுடன் இயங்கும் மின்குமிழ் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.தரம் நான்கில் கல்வி பயிலும் திவாகர் இவ்வாறான பல கண்டுபிடிப்புக்களை வீட்டிலே செய்து வருவதாகவும் அவர்களின் பெற்றோர் எமக்கு தெரிவித்தனர்.

திவாகரனிடம் கண்டு பிடிப்பு பற்றி கேட்டப்போது சீரற்ற காலநிலையால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வீட்டிலே மின்சாரம் இல்லாவிட்டாலும் பிரகாசத்துடன் வீட்டிலே படிப்பதற்கு வசதியாக இருப்பதற்காகவும் தங்களது தேவைகளை இலகுவாக செய்து கொள்வதற்காகவும் கண்டு பிடித்ததாக தெரிவித்தார்.

இம்மாணவனின் கண்டு பிடிப்பை ஊக்கப்படுத்துவதற்காக குழுவினாரால் பல மின்குழிழ்கள் வாங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

 

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here