மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் வெவர்லி மற்றும் போடைஸ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 130 வீடுகள் மற்றும் லொய்னோன் தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் லெய்னோன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 25 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டும் வைபவங்கள் 15-03-2018 அன்று மு.ப 10.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
வெவர்லி தோட்டம் போட்மோர் பிரிவில் 80 வீடுகள், போடைஸ் தோட்டம் கோணகல பிரிவில் 50 வீடுகள் மற்றும் லொய்னோன் தோட்டம் லின்போட் பிரிவில் 25 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான இவ்அடிக்கல் நாட்டும் வைபவங்களில் அமைச்சர் பழனி திகாம்பரம், இந்திய உயர்ஸ்தானிகத்தின் உதவி தூதுவர் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.