பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கமைள், உட்கட்டப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் நேற்று முன்தினம் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, ‘டஸ்ட்’ நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.