வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அட்டனில் ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!!

0
90

எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

அட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக 18.07.2018 அன்று மதியம் 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எரிபொருள் மற்றும் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும், தேவையற்ற வரிகள் நீக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதன் போது முன்வைக்கப்பட்டுள்ளன.

DSC00259 DSC00263

அரசாங்கம் எரிபொருள் சூத்திரம் எனும் அடிப்படையில் எந்தவொரு காரணமும் இன்றி திடீரென எரிபொருளின் விலையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், இதனால் சாதாரண மக்களது வாழ்க்கைச் செலவீனம் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

மு.இராமச்சந்திரன், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here