வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.
நேற்றைய தினம் அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கொடியேற்ற உற்சவம் கடந்த 13ஆம் திகதி நடைபெற்று ஆடிவேல்விழா திருவிழா நடைபெற்று வந்தன.
அதேநேரம் கதிர்காமம் பெரஹரா இன்று இடம்பெற உள்ளதுடன், அதற்கு சமாந்தரமாக மாணிக்க கங்கையின் இரு பக்கங்களையும் சுத்தம் செய்யும் மனுஷத் தெரணவின் விஷேட வேலைத்திட்டம் இன்று பகல் ஆரம்பிக்கப்பட்டது.