கடந்த 26.07.2018ம் திகதி நுவரெலியாவில் வைத்து மது போதையுடன் மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவர்
நுவரெலியா போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி செனவிரத்ன அவர்களால் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது இவருக்கு அதிகபட்ச தண்டப்பணமாக ரூபா 21500.00 நுவரெலியா மாவட்ட நீதவான் அறிவித்தார்.
இதுவே நுவரெலியாவில் மது அருந்தி வாகனம் செலுத்தியவருக்கு அதிக தொகை தண்டப்பணமாக அறியப்படுகின்றது.
எனவே மது போதையுடன் வாகனம் செலுத்துவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் என பொலிஸ் அதிகாரி
செனவிரத்ன அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
டீ. சந்ரு