மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 08.08.2018 அன்று நேரில் அஞ்சலி செலுத்தியது.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் சென்னையில் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தலைவரும், பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மத்திய, ஊவா மாகாண அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமானுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை ஆகியோர் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின் ஆறுமுகன் தொண்டமான் தமிழக செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றியமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)