உலகத் தமிழர்களின் தலைவனாக வாழ்ந்து மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தனதும் தொழிலாளர் தேசிய முன்னணியினதும் அஞ்சலிகளை செலுத்துவதுடன்.. இந்த துயரத்தில் பங்கேற்கும் வகையில் மலையகத்தில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுமாறும் தொழிலாளர் தேசிய முன்னணியின செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், பிரதித்தலைவரும் ராஜாங்க அமைச்சருமான வி. ராதாகிருஷ்ணன், நிதிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் , பொதுச செயலாளர் சந்ரா ஷாப்டர் ஆகியோர் சென்னை பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்