இந்திய அரசாங்கத்தின் நிதியீட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் பொகவந்தலாவை கிவ் தோட்டத்தில் 70 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 02-08-2018 திகதியன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தாணிகரின் 2ம் நிலை செயலாளர் ரமேஸ் ஐயர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங் பொன்னையா, சோ. ஸ்ரீதரன், எம். ராம், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.