கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கொட்டகலையில் பயிற்சி முகாம்!

0
87

மலையக பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் மக்கள் தாம் செய்யும் சுயதொழிலில் அதிகளவில் பயனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜப்பான் சர்வதேச தொழிலாளர் அமையத்துன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களில் ஒரு கட்டமாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று 15.09.2018 அன்று கொட்டகலையில் இடம்பெற்றது.

கொட்டகலை பிரதேசத்தை மையப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட 32 கால்நடை வளர்ப்பாளர்கள் இந்த பயிற்சி பட்டறையில் பங்கு பற்றிருந்தனர்.

இவர்களுக்கான பயிற்சியை ஜப்பான் சர்வதேச தொழிலாளர் அமையத்தின் பிரதி அமைப்பாளர் யூகி அவர்களின் நெரிப்படுத்தலின் கீழ் பங்களாதேஷ் மற்றும் இலங்கையின் வளவாளர்களால் முன்னெடுக்கபட்டது.

இந்த பயிற்சி பட்டறை ஆரம்ப விழாவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அனுஷியா சிவராஜா, நிர்வாக உபதலைவர் மாரிமுத்து, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here