மஸ்கெலியா மின்னா பெயாலோன் நீர் தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சடலம் 18.09.2018.செவ்வாய் கிழமை மதியம் 12மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்
மஸ்கெலியா மின்னா பெயாலோன் தோட்டபகுதியை சேர்ந்த கறுப்பையா லெச்சுமி ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது குறித்த வயோதிப பெண் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமற் போனார் அவரின் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்து இருந்ததாகவும் மஸ்கெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
இன்றய தினம் பெயோலோன் பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் குறித்த பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்ததை கண்ட பொது மக்களால் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது
சம்பவம் தொடர்பில் அட்டன் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து மரண விசாரனைகள் இடம் பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசதலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது .
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)