அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரம்பாதெனிய பகுதியில் தனியார் பேருந்தும் வேண் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து 05பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிஅட்டனில் இருந்து கொழும்பு பகுதியை நோக்கி பயனித்த தனியார் பேருந்தும் சீதுவையில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலாவிற்க்கு பயணிகளை ஏற்றிவந்த வேண் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கினிகத்தேன ரம்பாதெனியா பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த விபத்து 22.09.2018 சனிகிழமை காலை 07மணி அளவில் இடம் பெற்றதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் அதிகவேகத்தில் பயணித்த தனியார் பேருந்தின் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் சீதுவையில் இருந்து சுற்றுலாவிற்காக வருகை தந்த வேணில் 11பேர் பயணித்ததாகவும் இதில் 05பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கினிகத்தேன பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்