நுவரெலியாவிற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த 25 இளைஞர்கள் ஒருதொகை கேரளா கஞ்சா மற்றும் சட்டவிரோதமான கிகரட்டுகளுடன் அட்டன் குற்றபுலனாய்வு பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இந்து கைது சம்பவமானது 22.09.2018.சனிகிழமை மாலை வேலையில் இடம் பெற்றதாக அட்டன் குற்றபுலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் குற்றபுலனாய்வு பொலிஸாரினால் 22.09.2018 சனிகிழமை காலை முதல் மாலை வரை மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த கைது இடம் பெற்றதாகவும் கைது செய்யபட்டவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா 45200மில்லிகிராம் மற்றும் சட்டவிரோதமான சிகரட்டுகள் 271ம் மீட்கபட்டுள்ளதாக அட்டன் குற்றபுலனாய்வு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேலை கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 20 தொடக்கம் 25 வரையான வயதினை கொண்டவர்கள் எனவும் இவர்கள் காலி கொழும்பு மாத்தறை கண்டி போன்ற பகுதிகளை சேர்நதவர்களே கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது
கைது செய்யபட்ட 25 பேரும் 23.09.2018 ஞாயிற்றுகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கையினை அட்டன் குற்றபுலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் குற்றபலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்