புத்தரின் உருவம் வரையப்பட்ட சாரிகளை விற்பனை செய்த நபரை புறக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒருதொகை சாரிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புறக்கோட்டையில் வீதிகளில் குறித்த சாரிகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு அங்கிருந்த பெண் ஒருவர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.