நுவரெலியாவில் சுற்றுலா பயண வழிகாட்டிகள் இணைந்து; சர்வதேச சுற்றுலா தின நிகழ்வு!

0
114

சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளின் வழிகாட்டிகள் சங்கம் மற்றும் நுவரெலியா மாநகர சபை ஆகியவை இணைந்து நுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான மேடையில் சர்வதேச சுற்றுலா தினத்தை நேற்று (27.09.2018) வியாழக்கிழமை காலை கொண்டாடியது.

இதன் போது சர்வதேச சுற்றுலா தினத்தை பிரதிபளிக்கும் வகையில் நுவரெலியா பிரதான மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து பேரணி ஒன்றும் இடம்பெற்றது.
இப்பேரணியில் நுவரெலியா மாநகர மேயர் சந்தலால் கருணாரத்ன முன்னாள் மேயர் மஹிந்த தொடாம்பகமகேஇ பிரதி மேயர் யதர்சனா பூத்திரசிகாமணிஇ மாநகர சபை ஆணையாளர் திருமதி போதிமானஇ மத்தியமாகாண சுற்றுலா துறை அத்தியட்சகர் எ.எச்.எம்.பண்டாரஇ நுவரெலியா மாவட்ட சுற்றுலா பயணிகள் சங்க தலைவர் சரத் உதயகுமார நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சகோதரர் டட்லி சிரிசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள், வரைதல் போட்டி, பௌத்த கலாசாரத்தை பிரதிபளிக்கும் நிகழ்வுகள் என பல இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

டி.சந்ரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here