நோர்வூட்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நிலம் தாழ்இறங்கி உள்ளதோடு நிவ்வெளிகம பகுதியில் உள்ள ஐந்து குடும்பங்களை சேர்ந்த 23பேர் இடம் பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 08.10.2018.இரவு வேலையிலேயே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறதுஇதேவேலை நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள ஐந்து குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் காணபட்டுள்ளதோடு நிவ்வெளிகம பகுதியில் உள்ள மலை உச்சியில் உள்ள கற்பாறைகள் சரிந்து வரும் அபாயம் நிலவுதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காசல்ரீ நீர்தேக்கத்தில் அருகாமையிலே இந்த குடியிருப்புகள் காணபடுவதாகவும் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழ் இறங்கியுள்ளமையால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் வாகனசாரதிகள் மிக அவதானமாக போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு நோர்வூட் பொலிஸார் கோறியுள்ளனர்
இதேவேலை பாதிக்கபட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கபட்டுளள்தோடு சம்பவம் தொடர்பில் தேசிய முகாமைதுவ அறிக்கையை பெற்று கொள்வதற்காக நோர்வூட் பொலிஸார் ஊடாக குறித்த பிரதேசத்தை பரீசிலனை செய்வதற்காக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட உள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது
பாதிக்கபட்ட மக்களுக்கு குறித்த கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலாளருக்கு அறிவிக்கபட்டுளதாகவும் அவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது
(பொகவந்தலாவ நிருபர்எஸ்.சதீஸ்)