பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமை உள்ளிட்ட, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியால் மாபெரும் போராட்டமொன்று கொழும்பில் திங்கட்கிழமை (29) முன்னெடுக்கப்படுமென, அமைச்சர் ஹரின் பெரணான்டோ தெரிவித்தார்.