புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பாற்சோர் சமைத்து சந்தோசத்தை மகிழ்ந்த பொகவந்தலாவ மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பிலும் புதிய பிரதமராக பதவி ஏற்ற மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் பொகவந்தலாவ நகரபகுதியில் பாற்சோர் சமைத்து சந்தோசத்தை மகிழ்வித்ததோடு மஹிந்த ராஜபக்ஸ் அவர்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்து போது நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெத்து இருந்தார்.
இந் நிலையில் கடந்த மூன்று வருடகாலமாக நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் இடம் பெறாத நிலையில் 26.10.2018.வெள்ளிகிழமை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அவர்களினால் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு பிரதமர் பதவி வழங்கபட்டதோடு நாட்டில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தமை முன்னிட்டு மலையக மக்களாகிய நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைவதோடு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சிறந்த ஒரு தீர்வை பெற்று கொடுப்பார் எனவும் பொகவந்தலாவ இதன் போது தங்களது மகிழ்ச்சி செய்தியில் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)