ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமை பாரிய ஆர்ப்பாட்டம்!!

0
121

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதமராக நியமித்து ஜனாதிபதி மேற்கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் செவ்வாய் கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆயிரக்கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்பட்டுள்ள அரசியல் சதித்திட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு தொந்தரவு கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிரான இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.

புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டுமாயின் முதலில் அவர் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here