தலவாக்கலையில் இருந்து நாவலபிட்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
நாவலபிட்டி – தலவாக்கலை பிரதான வீதியில் நாவலபிட்டி கிரின்வுட் பிரதேசத்தில் இன்று காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் நாவலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.