தொடரூந்து பயணிகளிடம் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

0
104

தொடரூந்துகளில் யாசகர்களுக்கு பணம் கொடுத்தல் மற்றும் தேவையற்ற வியாபாரிகளின் பொருட்களை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்க்குமாறு பயணிகளிடம் கோரப்பட்டுள்ளது.
தொடரூந்து பாதுபாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தற்போது அவர்களுக்கு கடுகதி தொடரூந்துகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அதனை சாதாரண தொடரூந்துகளிலும் மேற்கொள்ளவும் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பையும் தாம் எதிர்பார்ப்பதாக, தொடரூந்து பாதுபாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here