கட்சி தாவிய வடிவேல் சுரேஷ் மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியை துறக்கப்போவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்த வசந்த சேனநாயக்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளரர்.
மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கப் போவதாகவும் கடந்த 14 ஆம் திகதி அறிவித்தார்.
மேலும் பதவியை துறந்து ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்துக் கொள்வதாகவும் பகிரங்கமாக ஊடகங்களில் தோன்றி அறிவித்திருந்த நிலையிலேயே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில் அவரும் கடந்த 14 ஆம் திகதி ஊடகங்களின் முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தனது ஆதரவை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.