மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் ஜன்னல்களை உடைத்து எறிந்து விட்டு தப்பி ஓடிய சந்தேக நபரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் 30.11.2018.வெள்ளிகிழமை மாலை 03.45மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறதுசம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியினால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யபட்ட முறைபாட்டுக்கு அமையவே குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மஸ்கெலியா வைத்தியசாலையில் தங்கபோவதாக கூறி வந்த நபர் திடிரென வைத்தியசாலையின் கட்டிடங்கள் ஜன்னல்கள் என்பன சேதபடுத்திவிட்டு தப்பி ஓடிய நபர் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர் எனவும் இவர் ஒரு மனநிலை பாதிக்கபட்டவர் எனவும் மஸ்கெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட மனநிலை பாதிக்கபட்ட சந்தேக நபரை 01.12.2018.சனிகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)