தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டதால் களத்தில் இறங்கி சிரமதானத்தை மேற்கொண்ட சின்ன இராணிவத்தை தோட்ட மக்கள்!!

0
96

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் அனேக ஊர் மக்களின் வாயில் ஒலிப்பது தேர்தல் காலத்தில் வெற்றிப்பெருவதற்காக குறைகளை நிறைவேற்றி தருவதாக கூறியும் இன்னும் கூறிய வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே மக்களின் குரலாக ஒலிக்கின்றது.

அவ்வாறு பல தடவைகள் செய்துதருவதாக கூறியும் இதுவரையும் செப்பனிடப்படாத ,பூர்த்தி செய்யப்படாத பாதையே சின்ன இராணிவத்தை தோட்டமாகும்.

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட இத்தோட்டத்தில் நீண்ட காலமாகவே பாதை பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர்.தேர்தல் காலங்களில் பாதையை புனரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தும் வெறும் வாய் வார்த்தையாகவே காணப்பட்டது.எனவே இனியும் அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை என அறிந்த தோட்டமக்கள் இன்று பாதைக்கு சிரமதான பணியை மேற்கொண்டனர்.

ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இச்சிரமதானத்தை மேற்கொண்டதோடு பாதையில் காணப்பட்ட உடைந்த இடங்களை மண்களால் நிரப்பியதோடு பாதை ஓரத்தில் காணப்பட்ட வடிகாணகளையையும் தூய்மைப்படுத்தினர்.எவ்வித பாகுபாடின்றியும் சிரமதான பணியை மேற்கொண்டதோடு இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம் என இச்சிரமதானத்தின் மூலம் வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here