டிக்கோயா போடைஸில் 24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் தீ- முற்றாக உடமைகள் எரிந்து சாம்பல்

0
132

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் 30ஏக்கர் தோட்டபகுதியில் உள்ள 04ம் இலக்க குடியிருப்பில் ஏற்பட்ட தீடிர் தீபத்து காரணமாக 24 குடியிருப்புகள் எரிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 29.12.2018 சனிகிழமை விடியற்காலை 06.15மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேலை இந்த லயன் குடியிருப்பில் இருந்த 24குடியிருப்புகள் முற்றாக எரிந்துள்ளதுடன் குடியிருப்பில் இருந்த
உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Image may contain: outdoor, water and natureImage may contain: 3 people, crowd and outdoorImage may contain: outdoor

தோட்ட பொதுமக்கள் ஹட்டன் பொலிஸார் நோர்வூட் பிரதேசசபை தோட்ட நிர்வாகம் இணைந்து தீயினை பகுதி அளவில் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதோடு தீயினை அனைப்பதற்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தீயனைக்கும் படையினர் வரவழைக்கப்பட இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேலை 24 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் போடைஸ் தமிழ் வித்தியாளயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்களுக்கான உளர் உணவு பொருட்களை வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச காரியாலயம் முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது. இதுவரையில் தீயினால் சேதமடைந்த பொருட்களின் பெறுமதி மதிப்பிட வில்லை எனவும் தீயிற்கான காரணம் கண்டரிய படவில்லை எனவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Image may contain: sky and outdoorImage may contain: fire, food and outdoorImage may contain: 1 personNo automatic alt text available.Image may contain: outdoor

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது

 

எஸ்.சதீஸ் , க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here