ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில்விக்ரசிங்க இருவருக்குமான இழுபறி நிலை தொடருமனால் அரசாங்காத்தை கொண்டுசெல்ல முடியாத சூழ்நிலையே காணப்படும்
ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னால் இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவிப்பு
மேலும் அவர் தெரிவிக்கையில் இதேவேலை இன்று தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயம் தொடர்பில் ஒரு அரசியல் கட்சி மக்களுடைய வாக்குகளை பெற்று கொள்வதற்காக இந்த பிரச்சாரங்களை மேற்கொண்டது ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்குவது என்பது கடினமான ஒரு விடயம் என்பதை முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளதோடு 600ரூபா மாத்திரமே வழங்க முடியும் என கூறி இருக்கிறது.
ஆனால் இவர்கள் கூறுகிறார்கள் ஆயிரம் ரூபா வாங்கி தருவதாக கூறுகிறார்கள் ஆனால் மக்களுக்கு ஒரு நியாயமான சம்பளத்தினை பெற்று கொடுப்பது ஒரு தொழிற்சங்கத்தின் கடமையாகும்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)