பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தனது அமைச்சு பணிகளைப் பொறுப்பேற்றார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள அமைச்சில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க ஆகிய அமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.