‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படுகின்ற அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
1913ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 30ஆம் திததி பிறந்த அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் பிறந்த தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்படுகின்றது.
சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது பாராளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இலங்கை, இந்திய கொங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியதோடு அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இலங்கை, இந்திய கொங்கிரஸ், இலங்கை தொழிலாளர் கொங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார். அவர் முக்கிய பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயற்பட்டார்.