இந்தியா – கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து!

0
22

உத்தியோகபூர்வ விஜயமாக கானாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7 ஆம் திகதி​களில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்க செல்லும் வழி​யில் கானா, டிரினி​டாட் அன்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்​றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்​கட்​ட​மாக, மேற்கு ஆபிரிக்க நாடான கானா தலைநகர் அக்​ரா​வுக்கு பிரதமர் மோடி கடந்த 2 ஆம் திகதி சென்​றார். கானா ஜனாதிபதி ஜான் டிராமணி மகாமாவை அவர் நேற்று சந்தித்தார். அப்​போது இரு நாடுகள் இடையே கலாச்​சா​ரம், தரநிலை சான்​று, ஆயுர்​வேதம், பாரம்​பரிய மருத்​து​வம் தொடர்​பாக 4 முக்கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here