இலங்கையிலுள்ள இஸ்ரேல் பணியாளர்களுக்கு விசேட அறிவிப்பு

0
7

இலங்கையில் தற்போதுள்ள இஸ்ரேல் பணியாளர்களுக்கு இலங்கை தூதரகம், விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இஸ்ரேல் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், திட்டமிடப்பட்ட திகதிகளில் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாதவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறித்த பயணிகளின் மறு நுழைவு விசா காலாவதியானால், அவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாது, எனவே இன்று (15) இது குறித்து தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மறு நுழைவு விசா காலத்தை நீட்டிப்பது குறித்து இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், எனவே தற்போது நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களும் தொடர்புடைய விவரங்களை இன்று பின்வரும் தொலைபேசி எண்களுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார கூறினார்:

இதற்கமைய 071-844 73 05, 071-683 35 13 ஆகிய இலக்கங்களுடனும் அல்லது 071-974 2095 இலக்கத்தில் வாட்ஸ்அப் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here