இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் – ஜெனீவாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

0
7

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஜெர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதற்கிடையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி முன்வந்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கக்கூடாது என்பதில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உடன்படுவதாக டேவிட் லாமி கூறியுள்ளார். ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த டேவிட் லாமி ஜெனீவா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இஸ்ரேல்-ஈரான் மோதலில் தற்போதைய நிலைமையை இருவரும் மதிப்பிட்டுள்ளனர்.

போரைத் தவிர்க்க மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று சீனா கூறியுள்ளது. வளைகுடாத் தலைவர்களும் பல்வேறு வழிகளில் இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தீர்க்க முயற்சித்து வருகின்றனர்.

இதேவேளை, பதட்டங்களுக்கு மத்தியில் தெஹ்ரானில் உள்ள தூதரகத்தை அவுஸ்திரேலியா மூடியது அமெரிக்காவை நேரடியாக போரில் ஈடுபடுத்த இஸ்ரேல் தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு உள்ளது. அமெரிக்காவின் தலையீட்டின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்கா ஈரானை தாக்கத் துணியக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது ஒரு போர் இலக்கு என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here