இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இன்று (25) இஸ்ரேலுக்கு சென்றடைந்தார்.
இப் பயணத்தின்போது இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கவுள்ள மோடி, அந் நாட்டு பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.
இச் சந்திப்பின்போது காஸா உள்ளிட்ட மத்திய கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் இஸ்ரேல் தலைவர்களுடன் பிரதமர் விவாதிக்கவுள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும்.




