ஈரானின் அணு நிலைகள் மீது இஸ்ரேல் நேற்று (19) தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் மத்திய நகரான அரக்கில் உள்ள கொன்தாப் அணு நிலை மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. நாடன்ஸ் அணு நிலை மீதும் தாக்குதல் நடத்தியதாக அது தெரிவித்தது.
கொன்தாப் அணு நிலைக்கு அருகே இரு வெடிகுண்டுகள் விழுந்ததாக ஈரான் ஊடகம் கூறி இருப்பதோடு கதிர்வீச்சு அச்சுறுத்தல் இல்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
தனது அணு சக்தித் திட்டம் அமைதியான நோக்கத்தைக் கொண்டது என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.
இஸ்ரேல் அணு நிலைகள் மீது நடத்தும் தாக்குதல் ‘சர்வதேச சட்டத்தை மீறும் செயல்’ என்று ஈரானின் அணு சக்தி நிறுவனம் கூறியது. குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனறும் அது தெரிவித்துள்ளது.