உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் போராட்டம்

0
252

உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (25.02.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் கலந்துகொண்டனர்.

” தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு உள்ளாகாதே, தேர்தலை உடன் நடத்து, மனித உரிமைகளைமீறி சர்வாதிகார ஆட்சி செய்யாதே, பொருட்களின் விலையை குறை” என்பன உட்பட பல கோஷங்கள் எழுப்பட்டன.

அத்துடன், தமது கோரிக்கைகளை பதாகைகளில் எழுதி அவற்றை தாங்கிபிடித்தவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(அந்துவன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here