எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வெற்றிகொள்ளும் உறுதியை புத்தாண்டில் ஏற்போம்!

0
153

”2022ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நோய்த்தொற்றினை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்ளம். பிறக்கும் புத்தாண்டில் எத்தகைய தடைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றை தோற்கடிக்கும் ஆத்ம பலமும் தைரியமும் எம்மிடம் உள்ளது என்று அனைவரும் உறுதியாக நம்ப வேண்டும். அதற்கு தேவையான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக அந்த நம்பிக்கையை அடைந்துகொள்ள முடியம்.

அனைவரும் ஒழுக்கப் பண்பாட்டுடன் எமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டிலும் உறுதிகொள்வோம். மலரும் புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் நோய்நொடிகள் இல்லாத வளமானதொரு எதிர்காலத்தை கொண்டு வர எனது மனமார்ந்த பிரார்த்தனைகளை மேற்கொள்வோம்” – எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here