எரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு பாராளுமன்றத்தில் பிரதமர் அறிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது.
புதிய விலை முறைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 92 மற்றும் 96 ஒக்டேன் ரக பெட்ரல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் குறைப்பட்டுள்ளது.
ஒடோ டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுப்பர் டீஸல் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.