திருகோணமலை, பாசிக்குடா கடலில் மூழ்கிய கண்டியை சேர்ந்த 7 வயது சிறுமியை இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்பாளர்கள் மீட்டுள்ளனர்.
கடலில் பலர் குளித்துக் கொண்டிருந்தபோது, குறித்த சிறுமி ஆபத்தில் இருப்பதைக் உயிர்காப்பாளர்கள் கவனித்துள்ளனர். உடனடியாகச் செயல்பட்ட அவர்கள் குழந்தையை நீர் நிறைந்த சுழியில் இருந்து மீட்டனர்.
குழந்தை கரைக்குக் கொண்டுவரப்பட்டு அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.




