கந்தஹேன தோட்ட பாடசாலைக்கு தண்ணீர் விநியோகம் மற்றும் கட்டடம் மறுசீரமைப்பு!

0
242

கந்தஹேன தோட்டத்திலுள்ள பாடசாலை தண்ணீர் விநியோகம் இன்றி, கட்டிடம் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில், தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டதுடன், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தையும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here