டெல்லி..அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நூன்மதியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரைக் கொன்று, அவர்களின் உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வந்தனா கலிதா என்ற பெண், திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டிருந்தார்.
அதை கண்டித்த அவரது கணவர் அமர்ஜோதி டே மற்றும் மாமியார் சங்கரி டேயைக் கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சரியான நேரம் கிடைத்தது தனது கள்ளக் காதலன் உதவியுடன் கணவர் மற்றும் மாமியாரைக் கொலை செய்தார் வந்தனா.
பின்னர் உடல் உறுப்புகளில் துர்நாற்றம் வராமல் இருக்க அவர்களது உடலை துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் வைத்துள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு, வந்தனா கலிதாவும் அவரது காதலரும் உடல் உறுப்புகளை குவஹாத்தியில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு எடுத்துச் சென்று உடல் உறுப்புகளை அப்புறப்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.